இவர்கள் இசைக்கு நான் ஒரு அடிமை. இதுவரை இவர்கள் இசைத்த இசைத்தட்டுகள் எல்லாம் காதுக்குள் ரீங்காரம்...
அமர்க்களம் , ரணகளதுக்குள் இயங்கி வந்த வாழ்க்கை குதூகலதுக்குள் துள்ளி குதித்தது. சில பாடல்கள் / இசை கோர்வைகள் என்னை கற்பனையாக படம் இயக்க வைத்தது. இசைக்கு மயங்காதோர் எவரும் இலர்.
கலர்ஸ் ஆப் இந்தியா, பிரம்மா (இரண்டு மற்றும் மூன்று), ஷட்ஜம்...இப்படியாக பயணிக்கிறது எனக்கு பிடித்த இசை ஸ்வரங்கள். என்னை பொறுத்த வரைக்கும் என்னுடைய தாலாட்டு. கருவில் இருக்கும் எனது ஆறு மாத குழந்தைக்கும் இவர்கள் பரிட்சயம்.
அலுவக பணிக்குள் இந்த இசை என்னை எளிதாக்கி இருக்கிறது. சொல்ல போனால் ஒரு தெளிவு கிடைக்க பெற்றேன் என்று சொன்னால் மிகவும் சரி. ப்ராஜெக்ட் இல்லாமல் வெட்டி தண்டம் வீணா போன முண்டமாக இருந்த எனக்கு ஒரு வர பிரசாதம் இந்த இசை. இல்லையெனில் கண்டிப்பா நா ஒரு மனோ நல மருத்துவரை பார்க்க வேண்டி வந்து இருக்கும்.
நீங்களும் கேளுங்க பாஸ்....
ஷ்யாம் சுந்தர்
No comments:
Post a Comment