Saturday, December 26, 2015

பசங்க-2 - யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

 பசங்க-2 - இன்றைய அன்றாட வாழ்வில் பெற்றோராய் நாம் கடந்து வந்த பாதையை, அணுகுமுறைகளை அதில் உள்ள தவறுகளை நமக்கே சுட்டி காட்டி இருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் விலகி இருந்தால் இது ஆவணப் படம் போல் ஆகி இருக்கும், அதனை சில சுவாரசியங்களோடு சூர்யா மற்றும் அமலா பால் கொண்டு அருமையாக தீட்டி இருக்கிறார்.

இதில் புதைந்து இருக்கும் கருத்துக்கள் விமர்சினத்திற்க்கு அப்பாற்பட்டு போகிறது. ஒரு தந்தையாய் நான் படம் பார்க்கும் போது உணர்ச்சிவசப்பட்டு போனேன். ஏனெனில் நானும் இந்த வலிகளை கண்டிருக்கிறேன். பலமுறை கண்டித்திருக்கிறேன்.பள்ளியில் இவனது செயல்பாடுகள் எங்களோடு பகிர்த்துகொள்ளபடும் தருவாயில் பல முறை நான் எதிர்காலம் குறித்து பயப்பட்டது உண்டு.

இந்த திரைப்படம் கண்டிப்பாக பல குடும்பங்களுக்கு மருந்தாகவே பார்க்கப்படும். கண்டிப்பாக கண்டிப்பான பெற்றோர்களுக்காக மட்டும்.
நமது நிராசைகளை, கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்ற கூடாது என்பதை இதற்க்கு மேல் வலிக்காமல் சொல்ல முடியாது.

ஒவ்வொரு காட்சிகளாக அடுக்கி சொல்ல விருப்பம் இருப்பினும் உங்கள் அனுபவத்திற்காக சுருக்கி இருக்கிறேன்.

பசங்க-2 - யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

No comments: